Thursday, April 11, 2024

“ஓடிடிகளுக்கான படங்களை தியேட்டருக்குக் கொண்டு வராதீர்கள்” – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வேண்டுகோள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ஒரு படத்தைத் தயாரிக்க முனையும்போதே அது ஓடிடிக்காகவா, அல்லது தியேட்டரில் வெளியிடவா என்று முடிவு செய்து தயாரிக்கும்படி” தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அட்வைஸ் செய்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று ஒரு விழாவில் பேசும்போது, “நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒரு கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய்தான் கிடைத்தது. ஆனால், அதுவே ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச் சொல்லி கேட்டு வருபவர்களிடம் படத்தைப் பார்த்ததும் சில படங்களை “தியேட்டருக்கு வேண்டாம். ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள்” என சொல்லி விடுவேன். ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக் கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும்.

இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும்தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.  மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்..” என்றார் ஆர்.கே.சுரேஷ்.

- Advertisement -

Read more

Local News