Friday, April 12, 2024

ரஜினிக்காக இன்னும் காத்திருக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கதை சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி, “எனக்கும் கதை இருந்தா சொல்லுங்க…” என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார்.

அப்போதே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றவர் ரஜினிக்கேற்ற ஒரு கதையை திரைக்கதை, வசனத்துடன் தயார் செய்து கொண்டு சென்னை திரும்பினார். ஆனால், அவர் சென்னை திரும்பியபோது ரஜினி அரசியல் பிரச்சினைகள்.. மற்றும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு என்று பலவற்றில் மாட்டிக் கொண்டார்.

தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு காலவரையறையின்றி தள்ளிப் போடப்பட்டுள்ளதால் “இப்போது கதை சொல்லப் போகலாமே…?” என்று கேட்டால், “அதெல்லாம் வேணாம் ஸார்.. இப்போதான் ரஜினி ஸார் ஆஸ்பத்திரில இருந்து திரும்பியிருக்காரு. கொரோனா பயம் வேற இருக்கு. அவருக்கான கதை தயாரா இருக்கு. அவருக்குத் தோணும்போது கூப்பிட்டாருன்னா, கண்டிப்பா நான் போவேன்.

இப்போ அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பட்ஜெட் படத்துக்கான கதையை எழுதிக்கிட்டிருக்கேன். இதுல யார் நடிக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்பதை இப்போதுவரையிலும் முடிவு செய்யவில்லை. முதலில் ஸ்கிரிப்ட்டை முடிவு செய்தால் மற்றவை தானாக முடிவாகும்..” என்கிறார் தேசிங்கு பெரியசாமி.

- Advertisement -

Read more

Local News