Friday, April 12, 2024

“இயக்குநர் ஆதிக் பல திறமைகளைக் கொண்டவர்” – நடிகர் பிரபுதேவா பாராட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பஹிரா’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பிரபுதேவா பேசும்போது, “இந்த பஹிரா’ படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து, வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல்தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ்.

நாயகி ஜனனி அழகாக இருக்கிறார். அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சாக்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். இந்த ‘பஹிரா’ திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் பேசும் போது, “இந்த பஹிரா’ திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பிரபுதேவா மாஸ்டர்தான். அவரிடம் சீன் சொல்லி நடிக்க சொல்ல பயமாக இருந்தது. என் பயத்தை போக்கினார். ‘பஹிரா’ படத்தின் கடைசி 7 நாட்களை என்னால் மறக்க முடியாது.

படத்தில் கதாநாயகிகளே இல்லை. அனைவரும் திறமையான நடிகர்கள். அமைராவுக்கும், பிரபு தேவாவுக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் இருக்கிறது. அமைராவிற்கு தமிழ் தெரியாது. ஆனால், நான் சொன்னதை கேட்டு திறமையாக நடித்து கொடுத்தார். பிரபு தேவாவுடன் உடன்  அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது  அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்..” என்றார்.

நடிகை சாக்ஷி அகர்வால் பேசும்போது, பஹிரா’ படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது “படத்தில் மொத்தம் 7 நாயகிகள்” என்று கூறினார். அதை கேட்டவுடன் இந்தப் படத்தை இவர் எப்படி இயக்குவார் என்று நான் பயந்தேன். ஆனால், நினைத்ததைவிட சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

நான் பிரபு தேவாவின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது…” என்றார்.

- Advertisement -

Read more

Local News