Friday, April 12, 2024

மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில், ’கர்ணன்’ படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளேன். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்…” என்று அறிவித்துள்ளார்.

இந்த ட்டீவிட்டுற்கு ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளரான  கலைப்புலி தாணு ’அளவில்லா ஆனந்தம்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.  

மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் தனுஷூம் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தான் நடிக்கவிருக்கும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் நரேன் ஆகியோரின் படங்களையும் முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News