The post ‘காந்தாரா’ படத்தின் 2-ம் பாகம்! appeared first on Touring Talkies.
]]>இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற திரைப்படம், காந்தாரா. கன்னட படமான இதன் வசூல், திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டும் வெற்றி அடைந்தது.
மொத்தத்தில் ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.
‘காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா?’ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர். இவர், “காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும். ரிஷப் ஷெட்டியுடன் கதை குறித்து விவாதிக்க இருக்கிறோம்” என்றார்.
The post ‘காந்தாரா’ படத்தின் 2-ம் பாகம்! appeared first on Touring Talkies.
]]>The post அஜித் கார்! ஆக்ஸிடண்ட் செய்த எஸ்.ஜே. சூர்யா! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து வீடியோ பேட்டியில் கூறிய எஸ்.ஜே.சூர்யா, “ அப்போது நான் வறுமையில் இருந்தேன். படம் வெற்றி பெற்றது. உடனே அஜித் அவர்கள் என்னிடம், ‘உனக்கு என்ன கலர் பிடிக்கும்’ என்றார். ‘உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்’ என்றேன். அவர், ‘வெள்ளை’ என்றார். நான், ‘எனக்கும் வெள்ளைதான் பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டேன்.
உடனே வெள்ளை கலரில் ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார் அஜித். அப்போது எனக்கு கார் ஓட்டத் தெரியாது. ஏறி உட்கார்ந்து காரை செலுத்தியவன், நேராக ஒரு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டேன்.. “ என்று மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் எஸ்.ஜே. சூர்யா.
The post அஜித் கார்! ஆக்ஸிடண்ட் செய்த எஸ்.ஜே. சூர்யா! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியை ‘அதற்கு’ சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த வரிசையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதையும் சொல்லலாம்.
பிரபலமான அந்த நிகழ்ச்சி, ரஜினியால் மேலும் பரபலமானது.
அது குறித்து தற்போது ஒரு தகவலை கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கூறியிருக்கிறார்:
“ஆரம்பத்தில் இதில் கலந்துகொள்ள ரஜினி விரும்பவில்லை. இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என் தந்தையை அணுகினார்கள். அவர்தான் ரஜினியிடம், ‘இது வித்தியாசமான நிகழ்ச்சி.. கலந்துகொள்’ என்றார் அதன் பிறகே ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்” என ரகசியத்தை உடைத்தார் புஷ்பா.
The post ரஜினியை ‘அதற்கு’ சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post காந்தாரா: சிவா கதா பாத்திரம் எனக்காக உருவாக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>பண்ணையாருக்கும்,பழகுடிமக்களுக்கும் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா.சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள், பிரபலங்களின் பாராட்டை பெற்றுவருகிறது.இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி நடித்திருப்பார்.
‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி வெற்றியும் பெற்றது. படம் குறித்த கேள்வியில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வாய்ப்பு தேடி அலைந்த போது நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்புறம் வயது ஆகிவிட்ட காரணத்தினால் நானும் வாய்ப்பு தேடவில்லை.
எனக்கான ஒரு வாய்ப்பாக காந்தாரா படத்தில் சிவா கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஊரில் எல்லோரும் முரடனாக இருக்காங்க அப்படித்தான் இதில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என்று இயக்குனராக எனக்கு தோன்றியது. அதனால் நானே எனக்காக உருவாக்கிக் கொண்டது தான் காந்தாரா படத்தின் நாயகன் சிவா கதாபாத்திரம் என்றார் இயக்குனர் ரிஷப் ஷட்டி.
The post காந்தாரா: சிவா கதா பாத்திரம் எனக்காக உருவாக்கப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>The post ஒரே படத்தில் இரண்டு மகா நடிகர்களுடன் நடித்த ஸ்ரீதேவி… appeared first on Touring Talkies.
]]>குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால்பதித்து பிறகு ஹீரோயின் ஆகி, கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம்,இந்தி,பல மொழி படங்களில் கதாநாயகியாக உச்சத்தில் இருந்தவர்.
1995ம் ஆண்டு இந்தி பட அதிபரான போனிகபூரை திருமணம் செய்து பாலிவுட் மருமகளாக மாறிவிட்டார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை தமிழில் தொடங்கி இந்தியில் முடிந்துவிட்டது. ஆனால் தமிழில் ஒரு முக்கியமான விசயம் செய்துள்ளார்.
அது..
1976ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில்’’மூன்று முடிச்சு’ படத்திலும் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் ’16 வயதினிலே’ படத்திலும் நாயகியாக நடித்தார்.
இந்த படங்களிலும் உச்ச நடிகர் ரஜினி, உலக நாயகன் கமல் ஆகியோர்
இணைந்து நடித்திருப்பார்கள். இப்படி இருபடங்களில் முக்கிய நாயகர்களுடன் நடித்த பெருமை ஸ்ரீதேவிக்குத் தான் உண்டு.
The post ஒரே படத்தில் இரண்டு மகா நடிகர்களுடன் நடித்த ஸ்ரீதேவி… appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனரே இல்லாமல் உருவான திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>சினிமா என்றாலே பலரது கூட்டு முயற்சிதான். அதிலும் இயக்குநர்தான் கேப்டன். அதனால்தான், சினிமாவை டைரக்டர் மீடியம் என்பார்கள். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது.
ஆனால் இயக்குநரே இல்லாமல் ஒரு படம் உருவானது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ். பாரதிராஜா இயக்கிய “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.
பிறகு படங்களை இயக்கவும் ஆரம்பித்தார்.
இந்த நிலையில், பிஸியாக இருந்த பாக்யராஜை சந்தித்த ராமகிருஷ்ண என்பவர், “எனது நண்பர் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். அதில் நீங்கள் கதை எழுதி, நடித்து தர வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்தார். அவரும் ஒப்புக்கொண்டு அந்த படத்திற்கு ‘’பொய் சாட்சி’’என்று பெயர் வைக்கப்பட்டது.
இத்திரைப்படத்தை ராமகிருஷ்ணன் மற்றும் பாக்கியராஜ் இருவரும் இயக்கியிருந்தனர். ஆகவே, யார் பெயரை இயக்குனர் என்று குறிப்பிடுவது என்று தயாரிப்பாளருக்கு குழப்பமாகிவிட்டது. இறுதியில் இயக்குனர் பெயரே இல்லாமல் படம் வெளியாதாம்.
The post இயக்குனரே இல்லாமல் உருவான திரைப்படம்… appeared first on Touring Talkies.
]]>The post திருமணம் என்னை மாற்றி விட்டது பூர்ணிமா பாக்கியராஜ் appeared first on Touring Talkies.
]]>நடிகை பூர்ணிமா பிஸியான நடிகையாக ஒருகாலத்தில் வலம் வந்தவர். 1980-ம் ஆண்டு ஆமலையாளத்தில் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தின் வழியாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளப்படங்கள் பலவற்றில் நடித்தார். 40 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்த வர், தெலுங்கு,தமிழ், இந்தி, போஜ்புரி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.
இப்படி பிஸியாக இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் பாக்யராஜை கரம் பிடித்தார். அதன் பிறகு நீண்டகாலமாக திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த அவர், பிறகுதான் சில திரைப்படங்களில் நடித்தார்
ஒரு பேட்டியில் அவரிடம்,” திருமணத்துக்குப் பிறகு நீண்டகாலம் ஏன் நடிக்கவில்லை: என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “சினிமா மட்டும் இருந்த போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். திருமணம் ஆன பிறகு, கணவர், குழந்தைகள் என குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் குடும்பத்தலைவியாக குடும்பத்தினரை கவனிப்பது அதைவிட முக்கியம் அல்லவா” என்றார்.
The post திருமணம் என்னை மாற்றி விட்டது பூர்ணிமா பாக்கியராஜ் appeared first on Touring Talkies.
]]>The post ஓவரா நடிக்கிறார் சிவாஜி குறை கூறிய உதவி இயக்குனர்…! appeared first on Touring Talkies.
]]>ஓவரா நடிக்கிறார் சிவாஜி குறை கூறிய உதவி இயக்குனர்…!
ஸ்ரீதரின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது உதவி இயக்குனராக இருந்த பாஸ்கர் சக உதவி இயக்குநர்களிடம் சிவாஜி பற்றி குறை கூறியுள்ளார். அது எப்படியோ அவர் காதுக்கு போய்விட்டதாம்.
உதவி இயக்குனரான பாஸ்கரிடம் சென்று என்னை பற்றி எதோ கூறிக்கொண்டு இருந்தீர்களே என்ன என்று கேட்டுள்ளார்.
பதறிப்போன பாஸ்கர் அவர் பெரிய நடிகர் ஆகிட்டே என்ன செய்யப்போராரோ என்று தயக்கத்துடன் நின்று இருக்கிறார்.அப்போது கூட இருந்த இயக்குனர்கள் உங்கள் நடிப்பு ஓவராக இருக்கிறது என்று அவர் கூறியதை சொல்லியிருக்கின்றனர்.
உடனே சிவாஜி ஸ்ரீதரை அழைத்து மீண்டும் இந்த காட்சியை படமாக்கி விடலாம் என்று கூ ற திரும்பவும் அந்த காட்சி படமாக்கப்பட்டது.
பின்னாளில் அந்த குறை கூறிய இயக்குனர் ரஜினியை வைத்து ’பைரவி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய எம்.பாஸ்கர் ஆவார்.
The post ஓவரா நடிக்கிறார் சிவாஜி குறை கூறிய உதவி இயக்குனர்…! appeared first on Touring Talkies.
]]>The post கிளைமாக்ஸ் காட்சிக்காக ரேவதி கன்னத்தில் அறைந்த பாரதிராஜா… appeared first on Touring Talkies.
]]>பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி,பாண்டியன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மண்வாசனை.நாயகன் நாயகி இருவருக்கும் தமிழில் இது முதல் படமாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா இருவரும் புதுமுகம் என்பதால் பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு நாயகிக்கான தேடலில் பாரதிராஜா ஆஷா கெலுன்னி நாயரை தேய்வு செய்துள்ளார். ஆனால் இயக்குனருக்கு நாயகியின் பெயர் தமிழ் சினிமாவுக்கு ஏற்றது போல் ரேவதி எனப் பெயரிட்டார் பாரதிராஜா. பரதநாட்டிய கலைஞராக ரேவதி இருந்தாலும் அவருக்கு இந்த படத்திற்கு தகுந்த முக பாவனையை பாரதிராஜா கற்றுக்கொடுத்தாராம்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரேவதி அழவேண்டும் ஆனால் அவருக்கு முகபாவனை அழுகையோ வரவே இல்லையாம். படத்தின் முக்கிய காட்சி என்பதால் வேறு வழியில்லாமல் ரேவதியின் கன்னத்தில் பலார் என்று ஒரு அரை கொடுத்தாராம்.
நிசமாகவே அழுது விட்டாராம் ரேவதி அது அப்படியே படமாக்கப்பட்டது தான் கடைசி காட்சி. .படம் வெளிவந்ததும் ரேவதியின் நடிப்பு தத்துருபமாக இருந்ததால் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
The post கிளைமாக்ஸ் காட்சிக்காக ரேவதி கன்னத்தில் அறைந்த பாரதிராஜா… appeared first on Touring Talkies.
]]>The post தடைகள் தாண்டி ஜெயித்து ’’காதலிக்க நேரமில்லை’’ appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் நவீனத்தை புகுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர். இவர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு “காதலிக்க நேரமில்லை”திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் எத்தனை தடைகளை தாண்டி வந்தது என்பது யாருக்கும் தெரியாது. முதலில் ஸ்ரீதர் இயக்கவிருந்த திரைக்கதை சரி வராமல் போனதால் பாதியில் நின்று போனது. அதே திரைப்படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்தார் ஸ்ரீதர்.
திரைப்படத்திற்கு பூஜை போட எல்லா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீதரின் செண்டிமெண்டாக ஒளிப்பதிவாளர் வின்சென்ட் சிறு வயது மகனை கேமரா பட்டனை ‘On’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வின்சென்ட்டின் மகன் ஏதோ காரணத்தினால் செட்டை விட்டு வெளியேற, பூஜைக்கு வரவேண்டிய ஐயரும் வரவில்லை.சரி படக்குழுவை வைத்து பூஜையை தொடங்கலாம் என்று கற்பூர ஆரத்தி எடுத்த போது அதுவும் அணைந்து விட்டதாம். இது பெரிய அபசகுணமாக அங்கிருந்தவர்கள் கருதி இருக்கின்றனர்.
ஆனால் ஸ்ரீதர் இதை விடவில்லையாம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் கேமராவின் பெல்ட்டும் அருந்து விழுந்து விட்டதாம்.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஸ்ரீதர் தனது முழு திறமை, உழைப்பை நம்பி நம்பிக்கையுடன் தடைகளை தாண்டி படத்தை எடுத்து முடித்தார்.
தடை மற்றும் அபசகுணங்களை கடந்து உழைப்பின் மீது நம்பிக்கை வைத்த ஸ்ரீதரின் “காதலிக்க நேரமில்லை” மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.
The post தடைகள் தாண்டி ஜெயித்து ’’காதலிக்க நேரமில்லை’’ appeared first on Touring Talkies.
]]>