Saturday, July 27, 2024

கிளைமாக்ஸ் காட்சிக்காக ரேவதி கன்னத்தில் அறைந்த பாரதிராஜா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் ரேவதி,பாண்டியன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மண்வாசனை.நாயகன் நாயகி இருவருக்கும் தமிழில் இது முதல் படமாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா இருவரும் புதுமுகம் என்பதால் பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு நாயகிக்கான தேடலில் பாரதிராஜா ஆஷா கெலுன்னி நாயரை தேய்வு  செய்துள்ளார். ஆனால் இயக்குனருக்கு நாயகியின் பெயர்  தமிழ் சினிமாவுக்கு ஏற்றது போல் ரேவதி எனப் பெயரிட்டார் பாரதிராஜா. பரதநாட்டிய கலைஞராக ரேவதி இருந்தாலும் அவருக்கு இந்த படத்திற்கு தகுந்த முக பாவனையை பாரதிராஜா கற்றுக்கொடுத்தாராம்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரேவதி அழவேண்டும் ஆனால் அவருக்கு முகபாவனை அழுகையோ வரவே இல்லையாம்.  படத்தின் முக்கிய காட்சி என்பதால் வேறு வழியில்லாமல் ரேவதியின் கன்னத்தில் பலார் என்று ஒரு அரை கொடுத்தாராம்.

நிசமாகவே அழுது விட்டாராம் ரேவதி அது அப்படியே படமாக்கப்பட்டது தான் கடைசி காட்சி. .படம் வெளிவந்ததும் ரேவதியின் நடிப்பு தத்துருபமாக இருந்ததால் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

Read more

Local News