Thursday, April 11, 2024

காந்தாரா: சிவா கதா பாத்திரம் எனக்காக உருவாக்கப்பட்டது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பண்ணையாருக்கும்,பழகுடிமக்களுக்கும் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் காந்தாரா.சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி ரசிகர்கள், பிரபலங்களின் பாராட்டை பெற்றுவருகிறது.இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி நடித்திருப்பார்.

 ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி வெற்றியும் பெற்றது. படம் குறித்த கேள்வியில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஒரு பேட்டியில் நான் சிறுவயதாக இருக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வாய்ப்பு தேடி அலைந்த போது நடிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்புறம் வயது ஆகிவிட்ட காரணத்தினால் நானும் வாய்ப்பு தேடவில்லை.

 எனக்கான ஒரு வாய்ப்பாக காந்தாரா படத்தில் சிவா கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஊரில் எல்லோரும் முரடனாக இருக்காங்க அப்படித்தான் இதில் நான் நடித்தால் நல்லா இருக்கும் என்று இயக்குனராக எனக்கு தோன்றியது. அதனால் நானே எனக்காக உருவாக்கிக் கொண்டது தான் காந்தாரா படத்தின் நாயகன் சிவா கதாபாத்திரம் என்றார் இயக்குனர் ரிஷப் ஷட்டி.

- Advertisement -

Read more

Local News