Friday, April 12, 2024

“தமிழ் நடிகைகள் அழுகிய தக்காளிகளா?” – நடிகை டாப்சியின் பொறுமல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் தென்னிந்திய மொழி நடிகைகளுக்கு மரியாதையே இல்லை…” என்று கொதித்துள்ளார் நடிகை டாப்ஸி.

நடிகை டாப்ஸி தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமாகி இன்றைக்கு பாலிவுட்டிலும் ஒரு முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

பாலிவுட்டில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது..?” என்று சமீபத்திய பேட்டியொன்றில் அவரிடத்தில் கேட்டபோது பொரிந்து தள்ளியிருக்கிறார் நடிகை டாப்சி.

அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் ஹிந்தியில் அறிமுகமானபோது என்னை தென்னக நடிகையாகத்தான் பார்த்தார்கள். தமிழ் நடிகை என்றாலே இவர்களுக்கு அழுகிய தக்காளிப் பழம் மாதிரிதான் தெரியும். இந்தப் பார்வை இன்னமும் மாறவில்லை.

இத்தனைக்கும் நான் பஞ்சாபி பொண்ணு. ஆனாலும் எனக்கு வேண்டிய மதிப்பும், மரியாதையும் இங்கே பாலிவுட்டில் இப்போதுவரையிலும் கிடைக்கவில்லை. நான் நடிகையாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாலிவுட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் இங்கே எனக்கான ஒரு இடத்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால் ஒன்று சொல்கிறேன்.. என்னை அலட்சியப்படுத்தியவர்களின் மூக்கை உடைக்காமல்விட மாட்டேன்.” என்று உறுதியாய் சொல்லியிருக்கிறார் நடிகை டாப்ஸி.

- Advertisement -

Read more

Local News