Thursday, April 11, 2024

நள்ளிரவில் வைரமுத்துவை எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘அலைபாயுதே.’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து எழுதிய, ‘ யாரோ.. யாரோடி..’ என்ற பாடல் பெரிய ஹிட் அடித்தது.

இந்த பாடல் அனுபவம் பற்றி கூறிய வைரமுத்து, “ அந்த பாடலை முழுதுமாக எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். இரவு தூங்கி கொண்டு இருந்தேன். நள்ளிரவில் போன் அடித்தது.

எடுத்தால், எதிர் முனையில் ஆர்.ரஹ்மான். அவர், ‘பாடலின் இரண்டாம் வரியை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். பாடகி நாளை ஊருக்குச் செல்கிறார். ஆகவே இப்போதே பதிவு செய்ய வேண்டும். அந்த இரண்டாம் வரியை மட்டும் அனுப்ப முடியுமா’ என்றார்.

அந்தத் தூக்கத்திலும் நான் உடனடியாக, ‘உன்னோட புருசன்..’ என்ற வார்த்தையைச் சொன்னேன். அது சரியாக அமைந்துவிட்டது” என்றார் வைரமுத்து.

- Advertisement -

Read more

Local News