Thursday, April 11, 2024

அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு.’

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ்  இந்தப் படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுள்ளார்.

இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ளனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது.

திருமணம் என்பது தனது வாழ்க்கையில் காதலும் மேஜிக்கும் நிறைந்ததாக இருக்கும் என்ற கனவில் இருக்கும் அம்மு என்ற சராசரி பெண்ணைச் சுற்றித்தான் இந்தப் படம் சுழல்கிறது.

திருமண வாழ்க்கையில் அவளுடைய போலீஸ்-கணவன் அவளை முதல்முறையாக கை நீட்டி அடிக்கும்போது எல்லாமே தலைகீழாக மாறுகிறது. ஒரு முறை நடந்த சம்பவம் என்று அம்மு நினைக்க இது முடிவில்லாத கதையாகத் தொடர்கிறது. இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதுதான் இந்த அம்மு படத்தின் கதைச் சுருக்கம்.

“ஐஸ்வர்யா, நவீன் மற்றும் சிம்ஹா ஆகிய நடிகர்களின் அற்புதமான நடிப்பு இல்லாமல் எங்களால் இதைச் சாதிக்க முடியாது. என் மீதும் எனது குழு மீதும் நம்பிக்கை வைத்த கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பிரைம் வீடியோ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் இயக்குநர் சாருகேஷ்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், “ஒரு தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் பாத்திரத்தை எனக்குச் சித்தரிப்பது சவாலாகவும், அதன் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் பெண்கள் தொடர்பு கொள்ள நிறைய இருக்கிறது, அதில் மிக முக்கியமானது எப்போதும் ஒருவரின் உண்மையைப் பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் ஆகும்.

கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச், இயக்குநர் சாருகேஷ் சேகர், எனது சக நடிகர்கள் நவீன் மற்றும் சிம்ஹா மற்றும் பிரைம் வீடியோவில் உள்ள குழுவினரின் நிலையான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அம்முவுக்கு பார்வையாளர்களின் எதிர்வினைகருத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.

“அம்முவின் கணவராக எனது கதாப்பாத்திரமான ரவியின் மனநிலையைப் புரிந்து கொள்வது முதலில் சவாலாக இருந்தது. ஒரு நடிகராக, இது போன்ற ஒரு சுவாரஸ்யமான கதையில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், அத்தகைய சவாலான கதாபாத்திரத்தை சித்தரிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சாருகேஷ், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக, பார்வையாளர்களின் மனதில் ஊடுருவும் ஒரு கதையை சிறப்பாகப் பின்னியுள்ளார்…” என்கிறார் நடிகர் நவீன் சந்திரா.

“கதையைக் கேட்ட மறுநிமிடம் அம்மு என்பது நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய தலைப்பு என்பதை நான் உணர்ந்தேன். ஐஸ்வர்யா மற்றும் நவீன் இருவரும் மிகவும் வலிமையான நடிகர்கள், அவர்கள் திரையில் நடிக்கும்போது உங்கள் கண்களைத் திருப்ப முடியாது. சாருகேஷ் கடைசிவரை பார்வையாளர்களை ஈர்க்கும் கதையை பின்னியிருக்கிறார்.” என்றார் நடிகர் பாபி சிம்ஹா.

இந்த அம்மு’ திரைப்படம் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வரும் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் டப்பிங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News