Friday, April 12, 2024

தனக்குக் திருமணம் ஆனதை ஒத்துக் கொண்ட நடிகை சஞ்சனா கல்ரானி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சஞ்சனா கல்ரானி தனக்குத் திருமணமாகிவிட்டதை இப்போது ஒத்துக் கொண்டுள்ளார்.

2015-ம் ஆண்டு ‘டார்லிங்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ரானி. இதன் பிறகு ‘கோ-2’, ‘யாகவராயினும் நா காக்க’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘கலகலப்பு-2’ என்று ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.

இவருடைய உடன் பிறந்த சகோதரியான சஞ்சனா கல்ரானியும் ஒரு நடிகைதான். ஏராளமான தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ‘போடா முண்டம்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார்.

இவரும் பிரபல கன்னட நடிகையான ராகினி திவேதியும் போதை மருந்து கடத்தல், விற்பனை குற்றச்சாட்டில் சிக்கி சமீபத்தில் ஜெயிலுக்கு சென்றனர். 3 மாதங்கள் கழித்து தற்போது இருவரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

போதை மருந்து கடத்தல் தொடர்பாக சஞ்சனாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது டாக்டர் அஸீஸ் பாஷா என்பவர் சஞ்சனாவின் குடும்பத்தினருக்கு நிறைய பண உதவிகள் செய்திருப்பது தெரிய வந்தது. அப்போது நடத்திய போலீஸ் விசாரணையில் “டாக்டர் அஸீஸ் பாஷா தனது கணவர்.. நாங்கள் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளோம்…” என்று நடிகை சஞ்சனா தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு பத்திரிகைகளுக்கு இது தொடர்பான எந்தச் செய்தியையும் சொல்லாமல் இருந்த நடிகை சஞ்சனா.. இன்றைக்கு உலக மருத்துவர் தினத்தையொட்டி தனது கணவருக்கு வாழ்த்துச் சொல்லியதன் மூலமாக தனக்குத் திருமணமாகிவிட்டதையும், தன்னுடைய கணவர் அஸீஸ் பாஷாதான் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News