Friday, April 12, 2024

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை புதிய படங்களில் நடிக்க வைக்கவோ, இயக்கம் செய்யவோ தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதற்குக் காரணம் பிரபல தயாரிப்பாளரான ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய கடனை எஸ்.ஜே.சூர்யா திருப்பித் தராததுதானாம்.

2014-ம் ஆண்டில் ‘இசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் 5 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இசை படம் வெளியாகி தோல்வியடைந்ததை அடுத்து.. எஸ்.ஜே.சூர்யாவால் அடுத்து படங்களைத் தயாரிக்க முடியவில்லை. மாறாக படங்களில் நடிக்கத் துவங்கினார்.

ஆனால், ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய 5 கோடியை இன்னமும் அவர் திருப்பித் தரவில்லையாம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் கொடுத்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எஸ்.ஜே.சூர்யாவை தங்களது சங்க உறுப்பினர்கள் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

- Advertisement -

Read more

Local News