Friday, April 12, 2024

நடிகர் ஆதிக்கும், நிக்கி கல்ரானிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்ச் சினிமாவில் மீண்டும் ஒரு நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.

பிரபல நடிகரான ஆதியும், பிரபல நடிகையான நிக்கி கல்ரானியும்தான் அந்தக் காதல் ஜோடிகள்.

இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் கடந்த 24-ம் தேதியன்று நடந்துள்ளது. இருவருக்கும் தற்போது கையில் படங்கள் உள்ளதால் அதை முடித்துவிட்டுத் திருமணத் தேதியை பிக்ஸ் செய்வார்களாம்.

ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தனது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஆதி, “என் திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். அது பற்றி முறையாக அறிவிப்பேன்’’ என்றார்.

இன்றைக்கு நிக்கி கல்ரானியுடனான அவரது திருமண நிச்சயத்தார்த்தம் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்ட காதலர்கள் இருவரும், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்து கொண்டுள்ளோம். 24.3.22… இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம். எங்களின் புதிய பயணத்தில் உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளனர்.

தமிழில் ’மிருகம்’, ’ஈரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆதி, ’யாகவராயினும் நா காக்க’, ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து நடித்தார். அதிலிருந்தே அவர்களிடையே காதல் பிறந்து காதலர்களாக பல இடங்களில் வலம் வந்தவர்கள், விரைவில் தம்பதிகளாக மாறவுள்ளனர்.

அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்..!

- Advertisement -

Read more

Local News