நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி ரிலீசாக இருக்கும்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
