இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடிக்கவிருக்கும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தில் நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

“நரிவேட்டை” படத்திற்கு பிறகு, டோவினோ தாமஸ் மீண்டும் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பணியாற்றி வருகிறார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இதற்கு முன்பு குயின், ஜன கண மன, மற்றும் மலையாளி பான் இந்தியா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக “டிராகன்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கயாடு லோஹர் நடிக்கவுள்ளார். இவர்களுடன், விஜயராகவன், தெலுங்கு நடிகர் சிவகுமார், சுதீர் கரமனா, ஜானி ஆண்டனி, டி.ஜி. ரவி, ஸ்ரீஜித் ரவி, பிரசாந்த் அலெக்சாண்டர், ஜெயகிருஷ்ணன், வினோத் கெடாமங்கலம் மற்றும் பல புதுமுகங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.