தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, ரஜினியின் உடல் நலன் பற்றியும், அவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும் தனது டிவீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில்…
“காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு.ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன்..”
என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் 4-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இதனால் தீபாவளி தினத்துக்கு முன்பாக ரஜினி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.