Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

12 மணிநேரம் தண்ணீரில் நின்ற மனிஷா கொய்ராலா… நெகிழ்ச்சி சம்பவம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள வெப் தொடர் ஹிரமண்டி.

இந்த தொடர் சமீபத்தில் வெளியானது மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் லாகூர் ஹீர மண்டியின் சிவப்பு விளக்கு பகுதியில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது.

சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், பரிதா ஜலால், சேகர் சுமன், ஃபர்தீன் கான், அத்யாயன் சுமன், மற்றும் ஸ்ருதி ஷர்மா என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடரில் எனது கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெறுகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொடரில் சில குறைகள் இருந்தபோதிலும், அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படப்பிடிப்பின் போது, 12 மணி நேரம் நீரில் நின்றேன். நீரின் குளிர்ச்சியான சூழலில் நீண்ட நேரம் நின்றது எனக்கு களைப்பையும், அதே சமயம், ஒருவிதமான மகிழ்ச்சியையும் அளித்தது.நீர் சூடாகவும் சுத்தமாகவும் இருந்தது. இதனால் சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News