Thursday, April 11, 2024

யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் புதிய படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பிஸியான நகைச்சுவை நடிகராகவும் அதேசமயம் செலக்டிவ்வான படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு.

இந்த நிலையில் நடிகர் என்பதையும் தாண்டி தற்போது புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்துள்ளார் யோகிபாபு. கதையின் நாயகனாக தான் நடிக்கும் படம் ஒன்றில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார் நடிகர் யோகிபாபு.

லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ் மூர்த்தியின் தயாரிப்பில் புரொடக்சன் NO-3 ஆக இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பெப்சி விஜயன், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் – யோகிபாபு, இயக்கம் – ரமேஷ் சுப்ரமணியம், ஒளிப்பதிவு – அதிசயராஜ்.R, கலை இயக்குநர் – S.ஜெயச்சந்திரன், படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், ஆடை வடிவமைப்பு – முதுல் ஹபீஸ், ஒப்பனை – ஸ்ரீதர், புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – K.வீரமணி, நடன ஒருங்கிணைப்பு – தினேஷ் & சுரேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – FIRE கார்த்திக், பாடல்கள் – விவேக், புகைப்படங்கள் – சந்தோஷ், விளம்பர வடிவமைப்பு – தண்டோரா சந்துரு, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அகமது.

வில் அம்பு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.

மேலும் இயக்குர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் புரொடக்சன் NO-2 ஆக உருவாகி வரும் படத்தையும் இதே லெமன் லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று இனிதே நடைபெற்றது.

- Advertisement -

Read more

Local News