Thursday, April 11, 2024

“பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Axess Film Factory G.டில்லி பாபு தயாரிப்பில், இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’.

புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக் குழுவும் முழு அர்ப்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பரத் மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை..” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டிருக்கும் நிறுவனம். Axess Film Factory ஒரு படத்திற்கு தரும் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. பேச்சுலர் படத்தின் ஒரு பாடலுக்காக மட்டுமே 5 மாதங்கள் எடுத்து கொண்டனர். இந்தப் படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் 20 நாட்களில் எடுத்ததுபோல் இருக்காது. மிகப் பெரிய பிரமிப்பை தரும் படைப்பாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும்..” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இப்ப இருக்கிற ஜெனரேஷன் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மைண்டில் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்கிறது. இது 20 நாட்களில் எடுத்த படம் மாதிரியே இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்திருக்கிறார். பெரிய திட்டமிடலுடன் படத்தை தந்துள்ளார். Axess Film Factory டில்லி பாபு நல்ல படங்களாக வெற்றிப் படங்களாக தயாரித்து வருகிறார் வாழ்த்துக்கள். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “Axess Film Factory தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகள் தந்து வருகிறார்கள். அவர்கள் தயாரிப்பில் என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில் நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்புதான் காரணம்.

பரத் சார்தான் இந்த படம் உருவாக முதல் காரணம். அவர் மூலமாகத்தான் தயாரிப்பாளர் இந்தக் கதையை கேட்டு தயாரிக்க ஒத்து கொண்டார். அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் ஒரு சேர ஒத்து போகக் கூடிய நபர் இயக்குநர். இந்தக் கதையைப் பற்றியும், இயக்குநரைப் பற்றியும் நான் கூறியபோது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துக் கொண்டார்.

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்தப் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை…” என்றார்.

தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராக எங்களது பொறுப்பு அதிகம். படத்தின் கதை, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைத்தையும் கதைக்கு ஏற்றார் போல் அமைக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

நாங்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் முதல் பட இயக்குநரின் படங்கள்தான். இது போன்ற படங்கள் மூலமாகத்தான், நாங்கள் சிறந்த நண்பர்களை சம்பாதித்துள்ளோம்.

இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும், பெரிய உழைப்பை கொண்டுள்ளது. முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்துதான் உருவாக்கினோம்.

பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள். இந்த படம் குடும்பங்கள் பார்க்கக் கூடிய ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

- Advertisement -

Read more

Local News