ஹரி இயக்கத்தில், ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப்பட்த்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சி, சென்னையில் நடந்து வந்தது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார், விஷால். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.இதனால் படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கிய விஷால், தானே அந்தப் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.இதன் படப்பிடிப்பு பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கலாம்.