Wednesday, April 10, 2024

விஜய்யை ஏமாற்றுகிறார் புஸ்ஸி ஆனந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கி உள்ளார். கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மொபைல் போன் செயலியையும் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர் சேர்க்கை எண்ணானது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யை ஏமாற்றுவதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதில் எஸ்.ஏ சந்திரசேகர் கூறி இருப்பதாவது. “ஒரு சமூக வலைதள பக்கத்தை புஸ்ஸி ஆனந்த் வைத்துள்ளார். இதில் விஜய் உட்பட 50 பேர் உள்ளனர். அதில் கட்சிக்காக புஸ்ஸி ஆனந்த் கஷ்டப்படுவது போன்ற பதிவுகள் போடப்படுகின்றன. அதை பலரும் லைக் செய்கின்றனர். இதை பார்த்து புஸ்ஸி ஆனந்த் கடுமையாக உழைப்பதாக விஜய் நம்பிக் கொண்டிருக்கிறார். விஜய்யை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அதில் எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்

- Advertisement -

Read more

Local News