Thursday, April 11, 2024

“ஹீரோவா நடிக்க வைக்க 20 லட்சம் கேட்டாங்க” – நடிகர் பிரஜினின் திடுக்கிடும் புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“தன்னை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக” நடிகர் ப்ரஜின் கூறியுள்ளார்.

இது குறித்து நடிகர் ப்ரஜின் பேசும்போது, “நான் ஆங்கரா இருந்தபோது இயக்குநர் சசி தன்னோட டிஷ்யூம் படத்துல சின்ன ரோல்ல நடிக்கக் கேட்டார். ஆனா எனக்கு ஹீரோவா நடிக்கணும்னுதான் ஆசைன்னு அவர்கிட்டயே சொன்னேன். ஆனாலும் அவர் வற்புறுத்தியதால் அந்தப் படத்தில் நடித்தேன். அஞ்சு, ஆறு சீன் என்றாலும் அந்த சீன்களெல்லாம் எடிட்டிங்ல கட் ஆகாமல் அப்படியே திரைக்கு வந்தது.

ஆனால் நான் ஹீரோவா நடிச்ச முதல் படமே பாதில டிராப் ஆயிருச்சு. என்ன காரணம்ன்னா அந்தப் படத்தோட பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சவுடனேயே என்கிட்ட தயாரிப்பு தரப்புல 20 லட்சம் ரூபா பணம் கேட்டாங்க. என்கிட்ட அவ்ளோ பணில்லை. இருந்தா நானே தயாரிச்சிருப்பனேன்னு சொன்னேன். ஆனா அவங்களோ பணம் கொடுத்தால்தான் ஹீரோ ஆக முடியும்ன்னு சொன்னாங்க. அப்படியில்லங்க. திறமையிருந்தாலே ஹீரோ ஆயிரலாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் அதுல இருந்து மீண்டு இப்போ இதுவரைக்கும் தமிழ், மலையாளம்ன்னு 24 படங்கள்ல நடிச்சிட்டேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News