‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இன்னமும் 30 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்று அந்தப் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
‘கைதி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலேயே அடுத்த பாகம் வரும் என்பது போலத்தான் படத்தை முடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அன்றிலிருந்தே ‘கைதி-2’ எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ‘கைதி’ இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கிவிட்டதாகவும், இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் எனவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களை முடித்த பின்னர் இருவரும் ‘கைதி’ இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.