நடிகர் விஷ்ணு விஷால் தற்போது “முண்டாசுப்பட்டி” மற்றும் “ராட்சசன்” படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் மூலம் ராம் குமாருடன் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேகமாக நடைபெற்றன. தற்போது, சுமார் 150 நாட்களாக நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக நடிகர் விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இப்படம் விரைவில் வெளியாவதுடன், இயக்குனர் ராம் குமார் இந்த முறையும் தனித்துவமிக்க படமாக உருவாக்கியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.