Thursday, April 11, 2024

லோகேஷ் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் என்ன தொடர்பு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்க்குனராக பணியாற்றியது இல்லை. ஆரம்பத்தில் வங்கி பணியாளராக இருந்தார்.

இவர் எப்படி திரைத்துறைக்குள் வந்தார் என்பதை மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

“விதாவது விஜயகாந்த்தின் ராவுத்தர புடக்சன்ஸில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தார்.  அவர்தான் விஜயகாந்த்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பார். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை  ஏற்பட்டது.  மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார். படம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு திரைத்துறையைவிட்டே ஒதுங்கிவிட்டார்.

 

அந்த சமயத்தில் சௌந்தர், தனது மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜ்ஜை தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்தார்.   இவ்வாறு சௌந்தரின் மகளுக்கு கணவராக ஆன லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு சினிமா எடுக்க முயற்சித்தான்.

அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்துதான் லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகினார்.  அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்”. இவ்வாறு விஜயகாந்த்திற்கும் லோகேஷுக்கு இப்படி ஒரு தொடர்பு இருக்கிறது” என்றார் அந்தணன்.

 

- Advertisement -

Read more

Local News