Thursday, April 11, 2024

படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் சொன்ன பார்முலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் பட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இளங்கோ குமரவேல். சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, விக்ரம் படத்தில் லாரன்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்.

பிரகாஷ்ராஜூடனான தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

“பிரகாஷ்ராஜுவுடன் அபியும் நானும் படத்தில் நடித்தது புது அனுபவம். ஸ்டார்ட் என சொன்ன அதே விநாடியில் கதாபாத்திரமாக மாறிவிடுவார். கட் சொன்ன அதே கணம், பிரகாஷ்ராஜாக ஆகிவிடுவார். எத்தனை எமோசனலான காட்சியில் நடித்தாலும் கட் சொன்ன பிறகு  அந்த பாதிப்பு அவரிடம் இருக்காது. இந்த மாஜிக்கை அவரிடம் பார்த்தேன்.

அதோடு நிறைய படிப்பார், திரைப்படம் பார்ப்பார்.. அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்வார். ஒருமுறை அவர், ‘புதுசு புதுசா கத்துக்கிட்டே இருக்கணும். இல்லேன்னா பின்தங்கி போயிடுவோம். பாம்பு தன் தோலை உரிக்கிற மாதிரி நம்மளை புதுப்பிச்சிக்கிரது புத்தகங்களும், திரைப்படங்களும்தான் என்றார். அவரதை அறிவுரையை மறக்கவே முடியாது” என்றார் இளங்கோ.

- Advertisement -

Read more

Local News