இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் டி.எஸ்.பி. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “நான் கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் நடிப்பேன் எனவும் நினைக்கவில்லை. ஆனால், அவர் சொன்ன கதை என்னை மிகவும் ஈர்த்தது. இப்படத்தில் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது.
கமல் ஸார் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு மிகப் பெரிய ஊக்கமாக இருப்பவர் அவர்தான். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் அவருக்கு எங்களின் நன்றி…” என்றார்.