Thursday, April 11, 2024

தனுஷ் கேட்ட அந்த கேள்வி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படம், பான் இந்தியா படமாக சக்கை போடு போட்டு வருகிறது. மக்களிடையே வரவேற்பு பெற்றதோடு, ரஜினி உள்ளிடட பிரபலங்களும் படத்தை மனதார பாராட்டி வருகிறார்கள்.

இந்த வரிசையில் நடிகர் தனுஷும் சேர்ந்திருக்கிறார். இது குறித்து நேற்று முன்தினம் யுடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் ஷெட்டி  “படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக தனுஷ் தெரிவித்தார்.  நான் அவரிடம், ‘என்  கல்லூரி காலத்தில் இருந்தே உங்கள் படங்களை பார்த்து ரசித்து வருகிறேன்’ என்றேன்.

பிறகு அவர், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அபாரம். அதுபோல காட்சி வைக்க பெரும் தைரியம் வேண்டும். எப்படி அந்த காட்சியை வைக்கத் துணிந்தீர்கள்?’  என்றார்.

அதற்கு நான், ‘நாம் என்ன நினைக்கிறோமோ.. அதைச் செய்துவிட வேணடும் என நினைத்தேன்’ என்றேன்.

தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல.. இயக்குநரும் கூட. அதனாலோ என்னவோ மிகச் சரியாக, கிளைமாக்ஸ் குறித்து கேள்வி எழுப்பினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார் ரிஷப் ஷெட்டி.

 .

 

- Advertisement -

Read more

Local News