The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.
]]>தற்போது, ‘ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ள இயக்குநர் சேரன், அடுத்து சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு, பா.ம.க. நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக் கதையை இயக்குவார் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
The post சேரன் இயக்கத்தில் திரைப்படமாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை! appeared first on Touring Talkies.
]]>The post சேரன் இயக்கும் வெப் சீரிஸ் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>இப்படம் குறித்து கிச்சா சுதீப் பிறந்தநாளன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சேரன், “ஆட்டோகிராப் போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்க காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ‘ஜர்னி’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் சேரன் இயக்கியிருந்தார். வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. இதில் சேரன் விவசாயம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். அது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சேரன். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடவுள்ளனர்.
The post சேரன் இயக்கும் வெப் சீரிஸ் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டோ கிராப்: ரகசியமா சேரன் செஞ்ச சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>அதில், சேரனுடன் பணியாற்றியது, ஆட்டோகிராப் பட படப்பிடிப்பில் இருவருக்கும் சிநேகாவால் பிரச்சினை ஏற்பட்டது என பல அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
தங்கர்பச்சான் தென்றல் படம் பண்ணிட்டு இருந்தார்.. சேரன் கிட்ட இருந்து வெளியே வந்துட்டேன்.. கூப்பிட்டீங்களே.. பழனி படப்பிடிப்பு
“ஆட்டோ கிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டாம் என நான் உட்பட உதவி இயக்குநர்கள் பலரும் கூறினோம். ஆனால் நடிப்பதில் உறுதியாக இருந்தார் சேரன். முதல் செட்யூல் கேரளாவில் நடைபெற்றது. அப்போததான் அவர் நடித்தது சரியே என நினைத்தோம். அந்த அளவுக்கு தன்னை நிரூபித்தார் சேரன்.
அந்த படத்தில் சேரனின் காதலிகளில் ஒருவராக வரும் கதாபாத்திரத்தில் கோபிகாவை செலக் செய்து விட்டோம். ஆனால் திடீரென சேரன், பாண்டவர் பூமி படத்தில் நடித்த சமீதாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் நானும் உதவி இயக்குநர்களும் இதை எதிர்த்தோம். இதை பிறகு சேரனும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் என் மீது இதனால் கோபமாக இருந்தார்.
படப்பிடிப்பின் போது, காட்சிகளை நீளமாக எடுத்தார் சேரன். ஒளிப்பதிவாளருக்குக் கூட இது ஏன் என்று புரியவில்லை.
பிறகுதான் தன் மனதில் இருந்த திட்டத்தை சேரன் கூறினார். ஆச்சரியமாக இருந்தது..” என்றார் பசங்க பாண்டிராஜ்.,
அனைவரையும் வியக்க வைத்த சேரனின் ரகசிய திட்டம் என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..
The post ஆட்டோ கிராப்: ரகசியமா சேரன் செஞ்ச சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post சிநேகாவால் பாண்டிராஜை அசிக்கப்படுத்திய சேரன்! appeared first on Touring Talkies.
]]>அப்போது அவர், “சேரனிடம், ‘பாண்டவர் பூமி’ படத்தில் துணை இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். அவரிடம் வேலை செய்தால் சம்பளம்கூட கிடைக்காது. ஆனாலும் திரைப்பட அனுபவம் கிடைக்கும் என்பதற்காக சேர்ந்தேன். அவரது ‘ஆட்டோகிராப்’ படத்திலும் துணை இயக்குநராகப் பணியாற்றினேன்.
சேரன் மிகவும் அன்பான மனிதர். ஆனால், கோபம் வந்துவிட்டால் அருகில் யார் இருக்கிறார்கள்… இல்லை என்றெல்லாம் பார்க்க மாட்டார். திட்டி தீர்த்து விடுவார். அது அவர் சுபாவம்.
இப்படித்தான் ஒரு முறை என்னை திட்டித் தீர்த்துவிட்டார். அதனால் டென்சனில் இருந்த நான், படக் குழுவில் இருந்த டிரைவர் ஒருவரிடம் கோபத்தைக் கொட்டிவிட்டேன்.
அவர், சிநேகாவின் கார் டிரைவர். நான் சொல்லாததையும் சேர்த்து, சினேகாவிடம் கூறியிருக்கிறார். சினேகாவும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல், அந்த டிரைவர் சொன்னதை அப்படியே சேரனிடம் சொல்லிவிட்டார். சேரனும் விசாரிக்காமல், 200 பேர் கூடி இருந்த இடத்தில் என்ன கடுமாகப் பேசிவிட்டார். அத்தனை அசிங்கமான வார்த்தைகள்.
இதனால் அவமானப்பட்ட நான், தன்மானத்தை இழந்து இனி இங்கு வேலை செய்ய வேண்டாம் என எண்ணி சேரனிடமிருந்து விலகினேன்” என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
அவரது வாழ்க்கையில் நடந்த மேலும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=wNY3C0CEkfY
The post சிநேகாவால் பாண்டிராஜை அசிக்கப்படுத்திய சேரன்! appeared first on Touring Talkies.
]]>The post பறையரில் இருந்து பறைய எடு!: சர்ச்சையை கிளப்பும் ‘தமிழ்க்குடிமகன்’ ட்ரைலர் நிகில் appeared first on Touring Talkies.
]]>படத்தின் ட்ரைலரை தற்போது வெளியாகி உள்ளது. இதில், கிராமப்புறத்தில் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவர் இறந்து விடுகிறார். அவரை சடங்குகள் செய்து அடக்க செய்ய வேண்டும் என்பதால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அழைக்கிறார்கள், ஆனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வரமறுக்கவே, பிரச்சனை ஆகிறது. இதற்காக அருகில் உள்ள ஊரில் உள்ளவர்களை அழைக்கச் செல்வது போலவும், ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைவதால், தங்கள் சொந்த ஊரில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்தவரையே மீண்டும் அழைக்கிறார்கள். அவர் வர மறுக்கவே பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் காவல் துறையையும், நீதி மன்றத்தையும் அணுகுகிறார், அதன் பின்னர் நடப்பது க்ளைமேக்ஸ் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் சேரன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக நடிக்கிறார்.
சேரனை இறுதிச் சடங்குகள் செய்ய அழைக்கும் காட்சியில், அவரை, “ பெரிய மைசூர் மகாராஜா பேரன் இவரு..போடா” என கூறுவது போன்ற வசனம் உள்ளது.
அதேபோல், சேரனின் மனைவியாக இருப்பவர், “அனைவரும் காந்தியைப் போலவும் பெரியாரைப் போலவும் இருந்துவிட்டால் ஊர் உலகத்தில் பிரச்னை இருக்காதுல” என கூறுவது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.
வழக்குரைஞராக வரும் எஸ்.ஏ. சந்திர சேகர், பறையர் என்ற வார்த்தையில் இருந்து பறையை எடுத்துவிட்டால் ஐயர் மட்டும் இருக்கும், அப்பறம் என்ன நாட்டில் உள்ள அனைத்து பிரச்னையும் இருக்காது’ என கூறும் வசனமும், ’உங்களுக்கு கோமனம் கட்டியுட்டது நாங்கதான், படிக்கவெச்சது நாங்கதான், சமூக நீதி வாங்கிக்கொடுத்தது நாங்கதான் என கூறும் ஒருவர் கூட இவரது போராட்டத்திற்கு ஆதரவு தந்தார்களா? இல்லை.. காரணம் ஜாதியை வைத்துதான் அவர்கள் அரசியல் செய்து வருகின்றனர்’ என்ற வசனம் என ட்ரைலர் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.
The post பறையரில் இருந்து பறைய எடு!: சர்ச்சையை கிளப்பும் ‘தமிழ்க்குடிமகன்’ ட்ரைலர் நிகில் appeared first on Touring Talkies.
]]>The post விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில் appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் பணப்பிரச்சினையில் சிக்கினார் சேரன். பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சேரன் இயக்கத்தில் நடிக்க விஜய் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதியை மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, “இதில் போட்டியாளராகப் போகச் சொன்னது கூட விஜய் சேதுபதிதான்.” என்று நெகிழ்ந்தார்.
ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, விஜய் சேதுபதி படத்தை சேரன் தொடங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
இருவரது கூட்டணியில் உருவாகும் படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில், அந்த படம் குறித்து சேரனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “விஜய் சேதுபதியின் நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதையை இப்போது மாற்ற வேண்டி இருக்கும். தவிர அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது” என்று கூறினார்.
The post விஜய்சேதுபதி – சேரன் கூட்டணி பிரேக் அப் ஏன்?: சேரன் பதில் appeared first on Touring Talkies.
]]>The post பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது appeared first on Touring Talkies.
]]>இயக்குனர் சேரன் பேசும்போது, ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
The post பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது appeared first on Touring Talkies.
]]>The post கேஎஸ் ரவிக்குமாருடன் சண்டை!: சேரன் ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இவர், “1990ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி முதல் படமான புதிரில் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். தொடர்ந்து அவரது, பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தேன்.
ஆனால் மன வருத்தம் காரணமாக விலகிவிட்டேன். ஆனால் வறுமை காரணமாக, மீண்டும் அவரிடம் சேரலாம் என சென்றேன். அவரும் பெரிய மனதுடன் சேர்த்துக்கொண்டார். இப்படி அவரிடமிருந்து விலகுவதும், சேர்வதுமாக இருந்தது.
இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. என் மீது ஏதோ ஒரு பிரியத்தால் மீண்டும் மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் சேரன்.
The post கேஎஸ் ரவிக்குமாருடன் சண்டை!: சேரன் ஓப்பன் டாக் appeared first on Touring Talkies.
]]>The post கமல்ஹாசன் திட்ட.. கடுப்பான சேரன்! appeared first on Touring Talkies.
]]>அவர், “ஆரம்பத்தில் நான் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கமல்ஹாசன் திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மூலம் “மகாநதி” திரைப்படத்தில் சந்தான பாரதியிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு நாள் கமல்ஹாசன் திடீரென ஜலதரங்கம் என்ற வாத்திய கருவி வேண்டும் என கேட்டார்.
ஆனால் எனக்கோ ஜலதரங்கம் என்றால் என்ன என்றே தெரியாது. பிறகு அது ஒரு இசைக்கருவி என்று தெரியவந்தது. விசாரித்ததில் சென்னை மைலாப்பூரில் ஒருவர் அதனை வைத்திருக்கிறார் என்பதை அறிந்தேன். அந்த நபரின் வீட்டை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவரிடம் ஜலதரங்கத்தை ஷூட்டிங்கிற்காக கொடுங்கள் என கேட்டேன். அவரோ மறுத்தார்.
அவரை வற்புறுத்தி, ஒரு வழியாக சமாளித்து, ஜலதரங்கத்தோடு அவரையும் கூட்டிக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தேன். ஆனால் அன்று அந்த காட்சியை படமாக்க முடியவில்லை.
“ஜலதரங்கம் வேண்டும் என்று முதலிலேயே கூறியிருந்தால் தயார் செய்து வைத்திருக்கலாம். இவர் ஏன் திடீரென என சொல்கிறார்” என்று கோபமடைந்தேன்.
இன்னொரு நாள் திடீரென மழை வந்துவிட்டதாம். வானத்தில் வானவில் தெரிய தொடங்கிவிட்டது. உடனே கமல்ஹாசன், “சீக்கரம் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க, கேமரா கொண்டுவாங்க, வானவில்லோட சேர்ந்து இந்த காட்சியை படமாக்கினால் நன்றாக இருக்கும்” என்றார்.
ஆனால் கேமரா யூனிட்டில் இருந்தவர்கள் மழை பெய்கிறது என்று கேமராவை ஒரு வண்டிக்குள் வைத்து தூரத்தில் எடுத்துக்கொண்டுப் போய் விட்டார்கள். நானும் சக உதவியாளர்கள் சிலரும் வெகு தூரம் ஓடிச்சென்று கேமரா யூனிட்டிடம் சொல்ல அவர்கள் மழை பெய்வதனால் வர மறுத்துவிட்டார்கள்.
அவர்களை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, கேமராவை கொண்டு வருவதற்குள் வானவில் காணாமல் போய்விட்டது. உடனே கமல்ஹாசன் கண்டபடி திட்டினார்.
இதனால் கோபமடைந்த அசோசியேட் டைரக்டர் ஒருவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அசோசியேட் டைரக்டரே கிளம்பிவிட்டார், இனி நாம் இருந்து என்ன செய்ய என்று நினைத்த நானும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன்.
ஆனால் அது எனக்கு ஏற்பட்ட அறியாமை என்று பின்னாளில்தான் எனக்கு தெரிந்தது” என கூறியிருக்கிறார் சேரன்.
The post கமல்ஹாசன் திட்ட.. கடுப்பான சேரன்! appeared first on Touring Talkies.
]]>The post பாடல் எழுத மறுத்த வைரமுத்து: டென்ஷன் ஆன சேரன்! appeared first on Touring Talkies.
]]>
சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘வெற்றிக்கொடி கட்டு’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், பாடலாசிரியர் விஜய் எழுதிய, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடல் செம ஹிட்.
ஆனால் இந்த பாடல் பல சிக்கல்களை கடந்துதான் வெளிவந்திருக்கிறது.
இந்த பாடல் குறித்து பேட்டி ஒன்றில் கூ றிய இசையமைப்பாளர் தேவா, “டம்மி வாக்கியமாக, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசன்ட் வாட்ஸ் பவரு’ என்று எழுதி கொடுத்தேன். இதை இயக்குநர் சேரன், வைரமுத்துவிடம் கொடுத்து, ‘இப்படித்தான் பாட்டு இருக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.
அதற்கு வைரமுத்து, ‘இந்த பாடலில் கலரு, பவரு போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கிறது’ என கூறினார்.
கோபமான சேரன், ‘நீங்க மட்டும், ‘பிப்டிகேஜி தாஜ்மஹால்’ன்னு எழுதுவீங்க…. ஆனா இப்போ மட்டும் ஆங்கிலம் கலந்திருக்குனு சொல்லுவீங்களா’ என்றார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.
அதன் பிறகுதான் பா.விஜய்யை வைத்து பாடலை முடித்தார் சேரன்” என்றார் தேவா.
The post பாடல் எழுத மறுத்த வைரமுத்து: டென்ஷன் ஆன சேரன்! appeared first on Touring Talkies.
]]>