Thursday, April 11, 2024

பாடல் எழுத மறுத்த வைரமுத்து: டென்ஷன் ஆன சேரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம்  ‘வெற்றிக்கொடி கட்டு’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால்,  பாடலாசிரியர் விஜய் எழுதிய, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடல் செம ஹிட்.

ஆனால் இந்த பாடல் பல சிக்கல்களை கடந்துதான் வெளிவந்திருக்கிறது.

இந்த பாடல் குறித்து பேட்டி ஒன்றில் கூ றிய இசையமைப்பாளர் தேவா, “டம்மி வாக்கியமாக, ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசன்ட் வாட்ஸ் பவரு’ என்று எழுதி கொடுத்தேன். இதை இயக்குநர் சேரன், வைரமுத்துவிடம் கொடுத்து, ‘இப்படித்தான் பாட்டு இருக்க வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

அதற்கு வைரமுத்து, ‘இந்த பாடலில்  கலரு, பவரு போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கிறது’ என கூறினார்.   

கோபமான சேரன், ‘நீங்க மட்டும், ‘பிப்டிகேஜி தாஜ்மஹால்’ன்னு எழுதுவீங்க…. ஆனா  இப்போ மட்டும் ஆங்கிலம் கலந்திருக்குனு சொல்லுவீங்களா’ என்றார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.

அதன் பிறகுதான் பா.விஜய்யை வைத்து பாடலை முடித்தார் சேரன்” என்றார் தேவா.

- Advertisement -

Read more

Local News