Monday, February 10, 2025

சில இயக்குனர்கள் எனக்கு ஏமாற்றம் அளித்தனர் – நடிகை ரெஜினா கசெண்ட்ரா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ரெஜினா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், பெரும்பாலும் பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதில்லை என்பதை குறிப்பிடினார். சில பெரிய படங்களில் பெண்களின் கதாபாத்திரங்கள் மிகவும் மோசமாக எழுதப்பட்டிருப்பதால் ஏமாற்றமடைந்ததாகவும் கூறினார்.

“விடாமுயர்ச்சி” படத்தின் போது நடிகர் அஜித் குமாருடன், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு பெரும் ஊக்கமளித்தது. இந்தக் கதாபாத்திரத்தை என்னைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்று இயக்குநர் மகிழ் திருமேனி என்மீது நம்பிக்கை வைத்தார். எனக்கு நீதியளிக்கும் ஒரு கதாபாத்திரத்தையே அவர் உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கையுடன் இதில் நடித்தேன். மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரத்தை நான் நியாயப்படுத்த முடியும் என்று என்மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

ஒரு படத்தின் கதையை அதன் பெண் கதாபாத்திரம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதன் மூலம் மதிப்பீடு செய்ய முடியும். இதனால் நான் எப்போதும் என் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனால் சில இயக்குநர்கள் எனக்கு ஏமாற்றமளித்த அனுபவம் உள்ளது. அதனால், எப்போதும் என்னிடம் சொல்லப்படும் கதைகளை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்கிறேன். ஒரே ஒரு தனித்துவத்தை உணர்ந்தாலேதான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News