Thursday, April 11, 2024

பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண்: இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குடியரசு தினத்தை முன்னிட்டு, 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாகும்.   ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

மறைந்த உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பத்மஸ்ரீ விருது பெறுகிறார். சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி நிபுணர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும், பாலம் கல்யாண சுந்தரமும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைப்பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளைக்கும், மருத்துவப் பிரிவில் மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News