Saturday, April 13, 2024

சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு இன்று முதல் சமூக வலைத்தளத்தில் தனித்து வலம் வரப் போவதாக அறிவித்து தனது முதல் வீடியோவையும் வெளியிட்டுவிட்டார்.

இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத் துவக்கத்தில் பாண்டிச்சேரியில் துவங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் மிக சீக்கிரமாக முடிவு செய்யப்பட்ட இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

‘மாநாடு’ படத்திற்குப் பின்பு சிம்பு நடிக்கவிருப்பது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில்.. இந்தப் படம் கன்னடத்தில் சென்ற ஆண்டு வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கவிருந்த இயக்குநர் நார்தன்தான் தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். சிம்புவின் படம் துவங்க காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இயக்குநர் நார்தனே படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இயக்குநர் நார்தன், கன்னடத்தின் ஸ்டார் நடிகரான யாஷ் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் கன்னடத்தில் எடுக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இயக்குநருக்குப் பதிலாக இப்போது சிம்புவின் இந்தப் புதிய படத்தை இயக்கவிருப்பது கிருஷ்ணாவாம். இவர், ஞானவேல்ராஜா தயாரித்த முதல் படமான ‘சில்லுன்னு ஒரு காதல்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஆரியை வைத்து ‘மானே, தேனே, பேயே’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News