நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தமிழக அரசு அமைத்திருக்கும் மருத்துவ விசாரணைக் குழுவிடம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆதாரங்களில் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு முன்பேயே பதிவு திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தைப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களும் அதில் அடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.