நகைச்சுவை கதாபாத்திரத்தில் மூன்று தலைமுறையாக தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் மனோரமா. குணச்சித்தர பாத்திரங்களிலும் அசத்தியவர்.
ஆனால் அவரது நடிப்பை புகழ்ந்து, ‘பொம்பளை சிவாஜி’ என்று அழைப்பார்கள்.
ஆனால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என இயக்குநர் திட்டிய சம்பவமும் நடந்து உள்ளது.
இது குறித்து, கூறி இருக்கிறார் தயாரிப்பாளர் வீரய்யா. இவர் கண்ணதாசனுடன் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தவர்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு சமயம் மனோரமா நாயகியாக நடித்த நாடகத்தை பார்த்த கண்ணதாசன், தான் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தல் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் காமெடி கதாபாத்திரம்.
முதலில் தயங்கிய மனோரமா, பிறகு ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பின் போது, 2, 3 டேக்குகள் வாங்கினார் மனோரமா. அதனால் ஆத்திரமான ஒளிப்பதிவாளர் மனோரமாவை திட்டினர். அதோடு, இந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.
இதை, மனோரமா தன் தாயிடம் கூறி அழ… அவரது தாயும் சேர்ந்து அழுது புலம்பி இருக்கிறார்.
இந்த விசயம் அறிந்த கண்ணதாசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரிடம், ‘மனோரமாவிற்கு நடிக்கத் தெரியவில்லை என்றால் சொல்லிக் கொடுப்பது நம் கடமை’ என்று சொல்லி நடிக்க வைத்தார்!” என்று தெரிவித்தார் தயாரிப்பாளர் வீரய்யா.
நடிப்புக்கு இலக்கணம் என்று போற்றப்படும் மனோரமாவின் முதல் பட சம்பவம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.