டி.வி. சீரியல் நடிகர்களான சம்யுக்தாவும் விஷ்ணுகாந்த் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, “நான் சின்ன பெண் என்று கூட விஷ்ணுகாந்த் பார்க்கவில்லை. 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும்” என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் விஷ்ணுகாந்த், ”ஆரம்பத்தில் எங்கள் திருமணத்துக்கு அவரது அம்மா ஒப்புக்கொண்டார். பிறகு ஏதேதோ சொல்லி பிரச்சினை செய்தார். ஒரு வழியாக திருமணம் முடிந்தது. ஆனால் முறைப்படி அவரது வீட்டில் முதலிரவு வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஆகவே முதலிரவை எங்கு வைப்பது என்றே தெரியவில்லை. பிறகு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினோம். இப்படி எல்லாமே அவரால் பிரச்சினைதான்” என்று கூறியிருக்கிறார்.