Thursday, April 11, 2024

தனுஷை அறைந்த செல்வராகவன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷை சினிமாவில் அறிமுகம் செய்தது அவரின் தந்தை கஸ்தூரி ராஜாதான். துள்ளுவதோ இளமை படத்தில்தான் தனுஷை நடிக்க வைத்தார். அப்போது தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.

 இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயர் வந்தாலும் பல காட்சிகளை இயக்கியது தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான்.

அடுத்து செல்வராகவன் தம்பி தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் தனுஷ் சரியாக நடிக்கவில்லை.

அண்ணன் செல்வராகவன் ரொம்ப பொறுமையாக தனுஷுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார், ஆனால் தனுஷ் மறுபடியும் நிறைய டேக் எடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் செல்வராகவன் கோபத்தில் எல்லோர் முன்னிலையிலும் தனுஷுன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.

உடனே தனுஷ் அழுதுகொண்டே அறைக்குள் போய்விட்டார்.

அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வராகவனிடம் ‘அவர் இப்பதான நடிக்க வந்துருக்கிறார்.. அவரை ஏன் அடிச்சிங்க? என கேட்டிருக்கிறார்’. மேலும் செல்வராகவனுடைய உதவியாளர்கள் தனுஷை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்தனர்.

இந்த தகவலைஇயக்குநர் மித்ரன் ஜவகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News