Wednesday, September 18, 2024

சமந்தாவின் மேனேஜர் ரூ.1 கோடி ஏமாற்றினாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. சினிமாவில் இருந்து இப்போது ஓய்வெடுத்துள்ள அவர், தசை அழற்சி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் மானேஜர், சமந்தாவிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மானேஜரிடம் சமந்தா விவரம் கேட்டபோது அவர் சொன்ன பதில் திருப்தியாக இல்லை என்று கூறப்படுகிறது. அவர் பற்றி சில தயாரிப்பாளர்கள் புகார் கூறியும் கேட்காமல் அவரையே தனது மானேஜராக சமந்தா வைத்திருந்தார் என்றும் இப்போது அவரை சமந்தா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மானேஜர் ரூ.80 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக புகார் வந்ததை அடுத்து அவரை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News