Saturday, July 27, 2024

”விஜய் நடிக்கலைனாலும் அந்தப் படம் சூப்பர் ஹிட் தான்..”: எஸ்.ஏ.சி. அதிரடி பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விமல் நடிப்பில் எழில் இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இயக்குநர் எழிலுக்காக தான் இந்த விழாவில் பங்கேற்க வந்தாக நெகிழ்ச்சியுடன்  கூறினார். மேலும் தேசிங்கு ராஜா 2 பட ஹீரோ விமலையும் அவர் பாராட்டினார்.

மேலும் பேசிய எஸ்.ஏ.சி., “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்… உடனே இயக்குநருக்கு போன் போட்டு முதல் பாதி அருமையாக இருக்கிறது என பாராட்டினேன். அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இரண்டாம் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒரு தகப்பனே தவறான மத நம்பிக்கையால் தனது பிள்ளையை அப்படியெல்லாம் பலி கொடுக்க விரும்ப மாட்டார் என  சொன்னேன். உடனே அந்த இயக்குநர் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதுவரை திரும்ப கூப்பிடவே இல்லை. நான் சொன்ன அந்த சீனை ரசிகர்களே வச்சு செய்தார்கள்” என கூறினார்.

அது லோகேஷ் தான் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சி., “விஜய்யின் கேரியரில் 10 படங்கள் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அதில் எழில் இயக்கிய முதல் படமான துள்ளாத மனம் துள்ளும் படமும் ஒன்று. அந்தப் படத்தின் கதையை கேட்டதுமே விஜய்யின் கால்ஷீட் கொடுத்துவிட்டேன், அந்தளவுக்கு திரைக்கதை நன்றாக இருந்தது. அதனால் தான் துள்ளாத மனமும் துள்ளும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அப்போது விஜய் என்ன சூப்பர் ஸ்டார் நடிகரா… அதெல்லாம் கிடையாது.

அந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் நடிக்காமல் வேறு எந்த ஹீரோ நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட்டாகிருக்கும். அதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி” என்றார் எஸ்.ஏ.சி.

 

- Advertisement -

Read more

Local News