Thursday, April 11, 2024

ரஜினியே பயந்தார் ரோஜாவிடம்! ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1992ம் வருடம் ரஜினி, ரோஜா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் வீரா.

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி, “படத்தின் நாயகி ரோஜாவிடம் பேட்டியே எடுக்காதீர்கள்.. என்ன வாடா போடா என திட்டும்” என்று நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அப்போதுதான், தமிழ் திரைத்துறைக்கு வந்திருந்தார்.  தமிழ் அரைகுறையாகத்தான் பேசுவார்.

அப்படி ஒரு முறை, ரஜினியை, ‘வாடா போடா’ என பேசிவிட்டார். அதே நேரம், அங்கிருந்த நாயை, ‘வாங்க போங்க’ என அழைத்திருக்கிறார்.

இதைப் பார்த்து படக்குழுவே அதிர்ச்சியாகி இருக்கிறது. இதை நினைவில் வைத்துத்தான் ரோஜாவை கிண்டலடித்திருக்கிறார் ரஜினி.

- Advertisement -

Read more

Local News