Thursday, April 11, 2024

எடுத்த சபதத்தை முடித்த ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல் இணைந்து நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் இவர்களுக்கு அளித்த  சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் உருவான ‘ஓ சீத கதா’ படத்தின் ரீமேக்தான் இது.

முன்னதாக மலையாளத்திலும் தான் மாட்டாரு சீதா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அப்படத்தில் கமல் வில்லனாக தோன்றினார். தமிழ் ரீமேக் படத்தை கே. பாலசந்தர் இயக்கினார். கமல் நடித்த  வில்லன் வேடத்தில் ரஜினி நடித்தார்.

இப்படத்தில் நண்பர்களான கமலும், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியினை காதலிப்பார்கள்.  ஆனால் ஸ்ரீதேவிக்கு கமல் மீது காதல். இதில்  ஆத்திரமான ரஜினிகாந்த், கமலை கொன்றுவிடுவார். இதை தொடர்ந்து ஸ்ரீதேவி, வேண்டுமென்றே, ரஜினியின் தந்தையை திருமணம் செய்து கொண்டு சித்திவிடுவார்.

இதையடுத்து ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் நடக்கும் உணர்வு போராட்டமே படம்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 

இன்னொரு சுவாரஸ்யமான விசயம்.

இன்று தமிழில் மிக அதிகமான சம்பளம் வாங்குபவர் ரஜினி.

‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்குத் முப்பதாயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. ஸ்ரீதேவிக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. வில்லனாக ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய்தான் சம்பளம். 

அப்போது ஸ்ரீதேவி அம்மாவிடம் ரஜினி ஆதங்கமாக, “விரைவில் அனைவரையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகனாக உருவாவேன்” என்றாராம்.

அதே போல  இன்று பெரும் சம்பளம் வாங்கும் நடிகராக உருவாகி, சொன்னதை சாதித்துவிட்டார் ரஜினி.

- Advertisement -

Read more

Local News