கவிப்பேரரசு வைரமுத்து சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்தவர். அவர் பாட்டு எழுதாத படங்கள் குறைவு என்றே சொல்ல முடியும் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து,கமல்,ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியிடம் நீங்கள் பார்க்காத வெற்றி இல்லை,மேடைகள் இல்லை,புகழ்,நீங்கள் சேர்க்காத பொருள் இல்லை இந்த வாழ்க்கை உங்களுக்கு சொல்கிற செய்தி என்ன என்று கேட்டார் வைரமுத்து.
வாழ்க்கையில் எத்தனையோ படிகள் இருக்கிறது.மரணம் எந்த படியில் வரும் என்று சொல்ல முடியாது. அடுத்த படியில் கூட இருக்கலாம். நிரந்தரமில்லாதது. வாழ்க்கை என்பது ஒரு பகல் கனவு என்றார் ரஜினிகாந்த்.