Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

நடிகர் ரவி மோகன் குறித்த அவதூறு பதிவுகளை நீக்க அவரது தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட பப்ளிக் நோட்டீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரவிமோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ரவிமோகன் மற்றும் பாடகி கெனீஷா இடையிலான காதல் தொடர்பான விவகாரம் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. இதற்கிடையில், ரவிமோகனை கடுமையாக விமர்சித்து ஆர்த்தி சில அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

பாடகி கெனீஷா, “என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் அகற்றவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில், நடிகர் ரவிமோகன், தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் எனக் கோரி, தனது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு வழக்கறிஞர் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில், “நடிகர் ரவிமோகனின் திருமணத்துடன் தொடர்புடைய அனைத்து அவதூறு பதிவுகளும் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். இது பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகிய அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட காலத்தில் அந்த பதிவுகள் நீக்கப்படாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News