Thursday, April 11, 2024

“ஏமாற்றிவிட்டார் இயக்குநர் பாலா” : புலம்பும் தயாரிப்பாளர் துரை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைத்தளங்களில் பிதாமகன் பட தயாரிப்பாளர் துரையின் சோக வீடியோக்கள் பரவி வருகின்றன.

25 வருடங்களுக்கும் மேல் திரைத்துறையில் இருந்து வரும் இவர், பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார். இதில், ரஜினி படங்கள் அடக்கம். அடுத்து, என்னம்மா கண்ணு, பொல்லாதவன், லூட்டி, பிதாமகன், கஜேந்திரா போன்ற திரைப்படங்களை தயாரித்தார்.

இவர் எடுத்த என்னம்மா கண்ணு, லூட்டி உள்ளிட்ட 3 படங்கள் அவருக்கு லாபத்தை கொடுத்தன. அப்போதுதான் அவரை இயக்குநர் பாலா சந்தித்தார்.

இதுபற்றி பேட்டியில் கூறியுள்ள விஏ துரை “பாலா மீது துரைக்கு என்பக்கு நல்ல அன்பும்,மரியாதையும் இருந்தது. பிதாமகன் கதையை இரண்டு வரிகளில் கூறினார். விக்ரம், சூர்யா நடிப்பதாகவும் நான்கரை கோடியில் எடுத்து முடித்து தருகிறேன் எனவும் கூறினார். ஆனால், படத்தை பல நாட்கள் எடுத்து ரூ.14.5 கோடியில் முடித்தார். படம் சூர்யாவுக்கும், விக்ரமுக்கும், பாலாவுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

ஆனால், நான் கடனாளியாக மாறினேன். அந்த கடனை அடைக்க மேலும் சில படங்கள் எடுத்து அதுவும் தோல்வியில் முடிந்தன. அதன்பின் என்னை சந்தித்த பாலா மேலும் ஒரு படத்தை செய்து தருவதாக கூறி ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். அந்தப் படத்தையும் துவங்கவில்லை.

பிறகு நான் மிகவும் கஷ்டப்படும் சூழல். ஆகவே, அவரிடம் அந்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு பாலா ‘உங்களிடம் எப்போது பணம் வாங்கினேன்?’ என கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது உடல் நலம் நலிவுற்று, சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவிக்கிறேன். சூர்யா, வெற்றிமாறன் ஆகியோர் எனக்கு உதவி செய்தனர். ரஜினியும் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.

ஆனால் என்னிடம் பணம் பெற்ற பாலா, இப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை” என வருத்தத்துடன் சொல்கிறார் தயாரிப்பாளர் துரை.

- Advertisement -

Read more

Local News