Thursday, April 11, 2024

பொ.செ. திரைப்படத்தை உருவாக்க இருந்த வெங்கட் பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இதற்கு முன், எம்.ஜி.ஆர்.,  கமல் ஆகியோர் படமாக எடுக்க முற்பட்டுக கைவிட்டார்கள்  என்பதும் தெரியும்.

இடையில், அஜித் – விஜய் கூட்டணியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது என்கிற புதிய தகவைச் சொல்லி இருக்கிறார் ஊடகவியலாளர் ஆர்.எஸ். அந்தணன்.

இவர் ஒரு பேட்டியில், “ஒரு முறை வெங்கட் பிரபு, அஜித்திடம், ‘உங்களையும் விஜயையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் தயாரிக்கிறேன். நீங்கள் இருவரும் அதில் நடிக்க வேண்டும்’ என்றார். இதற்கு அஜித்தும் ஒப்புக்கொண்டார். விஜயும் ஒப்புக்கொண்டார்.

வெங்கட் பிரபு இந்த விசயத்தை தனது தந்தையும் இயக்குநருமான கங்கை அமரனிடம் கூற, அவர், ‘இருவரையும் வைத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கலாம்’ என ஐடியா கொடுத்திருக்கிறார்.

ஆனால் ஏனோ அது நிறைவேறாமல் போய்விட்டது” என்றார் அந்தணன்.

- Advertisement -

Read more

Local News