Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“இப்போவெல்லாம் விஜய்தான் கதை கேக்குறார்” – அப்பா எஸ்.ஏ.சி.யின் வருத்தம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“இப்போதெல்லாம் விஜய் தான் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வதால் வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.” என்று நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “வாரிசு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. நானும் விஜய்யும் ஒண்ணா உக்காந்து கதை கேட்ட காலமெல்லாம் மாறிருச்சு. இப்போவெல்லாம் அவரே கதை கேட்கிறார். அவரே தீர்மானிக்கிறார். அவரே முடிவெடுக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர் தொடங்கி எல்லாத்தையும் அவரே முடிவு செய்றார். அதுல நான் தலையிடப் போறதில்லை.

அதனால இப்போவரைக்கும் எனக்கு வாரிசு படத்தோட கதை என்னன்னு தெரியாது. என்னதான் நம்ம குழந்தைகளா இருந்தாலும் அந்தந்த வயசு வரும்போது அவங்களுக்கான சுதந்திரத்தை நாம கொடுத்திரணும். இல்லைன்னா அதுவே வம்பாகியிரும்..” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

- Advertisement -

Read more

Local News