Thursday, April 11, 2024

மீண்டும் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் புதிய படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ வாத்தி ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது அவர் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50-வது படம் குறித்து அறிவித்திருக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கும் எனவும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி எனவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய கர்ணன் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைய உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News