Friday, April 12, 2024

“டான்ஸ்ல எனக்கு பாக்யராஜ் ஸார்தான் குரு” – மிர்ச்சி சிவாவின் கலாய்ப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“நடனத்தில் தனக்கு கே.பாக்யராஜ்தான் குரு” என்று நடிகர் ‘மிர்ச்சி’ சிவா கிண்டல் செய்திருக்கிறார். நேற்றைக்கு நடைபெற்ற ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இப்படி பேசியிருக்கிறார் ‘மிர்ச்சி’ சிவா.

இந்த விழாவில் நடிகர் ‘மிர்ச்சி’ சிவா பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது டைட்டில்தான். இதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார். ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர். அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப் படமும் வரவில்லை என்றார். உலகத்திலேயே எந்தப் படமும் வரவில்லை. அதனால் அவர் அதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாயகி நன்றாக நடித்திருக்கிறார்.

பாண்டியராஜ் சார், பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதைதான் ‘இன்று போய் நாளை வா’ என்றார். எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால்தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாப்படுகிறார்.

எனக்கு டான்ஸில் குரு அவர்தான். அவருடனும், சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்றார்.  

- Advertisement -

Read more

Local News