Saturday, April 13, 2024

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிலம்பரசன் T.R. நாயகனாக நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சி., ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி,  உதயா, அரவிந்த் ஆகாஷ், ‘படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பை கே.எல்.பிரவீண் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக உமேஷ் பணியாற்றுகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.. இந்நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், கொரோனா தொற்று காரணமாக படக் குழுவினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படக் குழுவினரின் பாதுகாப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவர் வீரபாபுவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் படக் குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் படக் குழுவினருக்கு  தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி படக் குழுவினருக்கு அவரது வழிகாட்டுதலின்படி ஆரோக்கியமான உணவு முறையும் வழங்கப்படுகிறது.

சொல்லப் போனால், கொரோனா தொற்றில் இருந்து படக் குழுவினரை பாதுகாப்பதற்காக, படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு மருத்துவ குழுவினர் கூடவே இருந்து, கவனித்து கொள்வது என்பது இதான் முதன்முறை. அந்த வகையில் படக் குழுவினர் அனைவரும், கொரோனா தாக்கம் குறித்த எந்த அச்சமும் இன்றி படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News