Thursday, April 11, 2024

“கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்”

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள் நிச்சயமாக இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும்விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ராம்கியும் இதில் நடித்திருக்கிறார். கார்த்திக்கை எல்லோருமே ப்ளேபாய் என்பார்கள். அது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் இந்த ராம்கியும் ஒரு பிளேபாய்தான். ஆனால் இது யாருக்கும் தெரியாது.

சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம்கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத் துறைக்கு வழங்கப்படவில்லை.

வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக் கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக் கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது..?

இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத் துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நல நிதிகூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றும் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்றார் கூறினார்.

- Advertisement -

Read more

Local News